சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
தற்போது கேரளா மாநிலம் கொச்சியில் தேசிய அளவிலான கார்ட்டூன் திருவிழா நடைபெற்று வருகிறது. கேரள கார்ட்டூன் அகாடமி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் சில தினங்களுக்கு முன் அதாவது தனது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் மோகன்லால். அங்கே இருந்த ஆர்ட் கேலரியை பார்வையிட்ட மோகன்லால், ஸ்மைலிஸ் குறியீடுகள் வரையப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அப்போது கார்டூனிஸ்ட்டுகளை வாழ்த்தி பேசிய மோகன்லால், “ஓராயிரம் வார்த்தைகள் சேர்ந்து சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு கார்ட்டூன் சொல்லிவிடும்.. அவ்வளவு ஏன் ஒரு செய்தித்தாள் வாசித்த உணர்வை ஒரு கார்ட்டூனே தந்துவிடும். நம் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.சங்கர் என்பவரின் கார்ட்டூன்களில் தனது படம் இடம்பிடிப்பதை பெருமையாக நினைத்தார்” என கார்ட்டூனிஸ்ட்டுகளை பாராட்டியதோடு கார்ட்டூனிஸ்ட்டுகளால் தான் அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.