மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
நடிகைகளையும், கிசுகிசுக்களையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். பொதுவாக கிசுகிசுக்கள் என்பதை பத்திரிகையாளர்கள் மட்டுமே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதில் சில சமயம் உண்மையும் இருக்கும், சில சமயம் பொய்யும் இருக்கும். ஆனால், பல காதல் கிசுகிசுக்கள் கடைசியில் உண்மையாகவே மாறியிருக்கின்றன. சில காதல்கள் அந்த கிசுகிசுக்களால் மட்டுமே உருப் பெற்றிருக்கின்றன. இப்படி கிசுகிசுக்களுக்கென தனி மரியாதை (?) இருந்து வந்தது. இந்த மரியாதையை இப்போது சில நடிகர், நடிகைகள் கெடுக்க ஆரம்பித்துவிட்டார்களோ என யோசிக்கத் தோன்றுகிறது.
தாங்களாகவே கிசுகிசுக்களை உருவாக்கி, அதை தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் மூலம் பரவவிடும் வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நடிகர்களில் சிம்பு இந்த ரகம் தான். நடிகைகளில் சமந்த உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். சமீபத்திய அவருடைய காதல், கல்யாணம் ஆகிய செய்திகள் அனைத்துமே சமந்தாவே வேண்டுமென்றே கிளப்பி விட்ட சர்ச்சைகள் என்கிறார்கள். பைசா செலவில்லாமல் அப்படி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டால் மீடியாக்களில் சில நாட்கள் வலம் வரலாம் என யாரோ அவருக்கு யோசனை சொல்லி செயல்படுத்தியிருக்கிறார்கள்.