பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் வெற்றி பயணங்களுக்கு ஊன்றுகோலாக செயல்படுவது கேரளாவில் இருந்து உருவான கதாநாயகிகள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த காலத்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த திருவாங்கூர் சகோதிரிகள் லலிதா, பத்மினி, ராகிணி முதல் தற்போது அனைவரின் மனதையும் மெழுகு போல் கரைக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சிமா மோகன் வரை அனைவரும் உதயமானது கேரளாவில் இருந்து தான். அந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் மிர்துளா.
பரதநாட்டியத்திலும், மாடலிங் துறையிலும் கை தேர்ந்தவரான மிர்துளா ஒரு சிறந்த தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயால் நானல்ல என்னும் மலையாள படத்தில் பஹத்தோடு ஜோடி சேர்ந்து நடித்த மிர்துளாவை வெகுவாக பாராட்டி உள்ளது மலையாள சினமா வட்டாரங்கள். தன்னுடைய குழந்தை பருவத்திலேயே தொகுப்பாளராக இருந்த இவர், நடிப்பு தான் தனக்கு உலகம் என்கிறார்.
இதுகுறித்து மிர்துளா கூறியிருப்பதாவது... "என் சிறு வயதில் என்னிடம் நீ என்னவாக ஆக போகிறாய் என்று பல பேர் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் அப்போது சொன்ன பதில், நடிகையாக வேண்டும் என்பது தான். அந்த நாட்களில் இருந்தே எனக்கு நடிப்பு என்னும் சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. கோலிவுட் கதாநாயகிகள் மேல் அவர்களின் ரசிர்கள் வைத்திருக்கும் அன்பையும் அவர்களை கொண்டாடும் தருணங்களையும் கண்டு நான் பல முறை வியந்ததுண்டு. எனவே இங்கு வெளியாகும் எல்லா தமிழ் படங்களையும் நான் தவறாமல் பார்த்துவிடுவேன். தற்போது தமிழ் படங்களில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் சிவகார்திக்கேயன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோரின் வித்தியாசமான நடிப்பும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை அம்சங்களும் என்னை பெரும் அளவில் கவர்ந்துள்ளது. எனக்கு நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருந்தால், அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையும்" என்கிறார் மிர்துளா.