ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் மீண்டும் பரபரப்பாகியிருக்கும் ஐஸ்வர்யா ராய், சரப்ஜித் படத்தை தொடர்ந்து கரண் ஜோகரின் 'ஏய் தில் ஹேய் முஷ்கில்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, பவாத்கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஐஸ்வர்யா-ரன்பீர் இடையே லிப்-டூ-லிப் முத்தக்காட்சி இருப்பதாகவும், அதில் நடிக்க ஐஸ்வர்யா ராய் தயங்குவதாகவும் செய்தி வெளியான நிலையில், இப்போது கரண் ஜோகர், அந்தமுத்தக்காட்சியில் ஐஸ்வர்யாவை நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார். மேலும் அந்த முத்தக்காட்சியை இருவரும் சாக்லேட் உண்பது போன்று மாற்றி படமாக்கியிருக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்தாண்டு தீபாவளியன்று ஏய் தில் ஹேய் முஷ்கில் படம் ரிலீஸாக உள்ளது.