இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் சமுத்திரகனி தற்போது 'அப்பா' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் புரமோசனுக்காக சினிமா வி.ஐ.பிக்கள் தங்கள் அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். சினிமாவை தாண்டி சின்னத்திரை தொகுப்பாளர் ரம்யாவும் தன் அப்பா பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
என் அப்பா பற்றிய நிறைய பேசலாம். என்னை ரம்யான்னு கூப்பிடுவதை விட ரம்யா சுப்பிரமணியம் என்று அழைப்பதையே பெருமையாக நினைக்கிறேன். என்னோட அப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அந்த கஷ்டத்தை நாங்கள் படக்கூடாது என்று எங்களை செல்லமாக வளர்த்தார். நாங்கள் கேட்டதெல்லாம் உடனே வாங்கிக் கொடுத்தார். இதை செய், அதை செய்யாதே என்று எங்களுக்கு அறிவுரை சொன்னதே இல்லை. அவர் அதை வாழ்ந்து காட்டுவார் நாங்கள் புரிந்து கொள்வோம். நேரம் தவறாமை, எல்லோரையும் சமமாக மதித்தல், எல்லோரிடத்தும் அன்பு செலுத்துதலை கற்றுக் கொடுத்தார்.
சமீபத்தில் என் வாழ்க்கையில் ஒரு கடுமையான பகுதியை நான் கடந்த போது நான் எடுத்த முடிவு சரியானது தானா, சரியான பாதையில் தான் செல்கிறோமா என்கிற குழப்பத்தில் தவித்தபோது கூட இருந்து எனக்கு வழிகாட்டியவர் அப்பாதான். அவர் இல்லாமல் நான் இல்லை. என்னிடம் யாராவது உங்களுக்கு பிடித்தவர் யார் என்று கேட்டால் அப்பா அப்பா என்று ஆயிரம் முறை சொல்வேன். என்று கூறியுள்ளார் ரம்யா.