மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1988ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய 'செந்தூரப்பூவே' படத்தை இயக்கியவர் பி.ஆர்.தேவராஜ். விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்திருந்தனர். விஜயகாந்திற்கு ஒரு திருப்பத்தையும், ராம்கி, நிரோஷாவுக்கு காதலையும் கொடுத்த படம். அதன் பிறகு தேவராஜ் 'இளையராகம்' என்ற படத்தை இயக்கினார். அது தோல்வி அடையவே சினிமாவிலிருந்து விலகி தெலுங்கு டி.வி தொடர்களை இயக்கி வந்தார்.
சென்னை தி.நகரில் வசித்து வந்த தேவராஜ், தனது நண்பர்களுடன் கோவையிலிருந்து ஜதராபத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். கார் கர்னூல் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து சாலையில் உருண்டது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலன் இன்றி தேவராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. நண்பர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேவராஜ் உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. தேவராஜுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.