'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜிகிர்தண்டா குடித்து புகழ்பெற்ற நடிகர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஏகப்பட்ட குறும்படங்களில் நடித்து தள்ளியிருக்கிறார். இப்போது அவருக்கு ஓரளவுக்கு மார்க்கெட் வந்ததும். அந்த குறும்படங்கள் எல்லாம் பெரும்படங்களாக மாற்றப்பட்டு ரிலீசுக்கு அணிவகுத்து வருகின்றன. அதில் சில வில்லங்கமான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அப்படி வருகிற படத் தயாரிப்பாளர்களிடம் தனக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்டு நிறுத்தப் பார்க்கிறார். ஆனால் அது நடக்கவில்லை. சங்கத்தில் புகார் செய்கிறார். “குறும்படமோ, பெரும்படமோ நடிச்சது நடிச்சதுதான் அதை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள் சங்கத்தின் சட்ட நிபுணர்கள். தன்னை வளர்த்த குறும்படங்களே தன்னை கீழே தள்ளிவிடுமோ என்கிற பயத்திலேயே இருக்கிறார் நடிகர்.