தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்தவொரு பொது விழாக்களிலும் கலந்து கொள்ளாத அஜித், எப்பவும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியது இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஓட்டுப்போடுவார்.
அதன்படி இன்று(மே 16ம் தேதி) நடைபெற்று வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் நடிகர் அஜித் தன் ஓட்டை பதிவு செய்தார். சென்னை, திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் காலை 7.15 மணிக்கே மனைவி ஷாலினியுடன் வந்து ஓட்டுப்போட்டார். அப்போது தேர்தல் அதிகாரி, அஜித்திற்கு விரலில் மை வைக்கும்போது ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடுவிரலில் மை வைத்துள்ளார். இதை அஜித் ஓட்டுப்போடும் போது போட்டோ கிராபர்களுக்கு காண்பிக்கும்போது தெரியவந்தது.
ஓட்டுப்போட்டதற்கான அடையாளம் நடு விரலில் இருந்ததால் அதை உயர்த்தி காண்பித்தால் அது அநாகரீகம் ஆகிவிடும் என்பதால் எல்லா விரல்களையும் சேர்த்தே நிருபர்களிடம் காட்டி மாண்பு காத்தார் அஜித்.