'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்ற சில மாதங்களில் அருணா என்ற பெண்ணை 2012 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே பாலாஜி மோகன் தன்னுடைய மனைவியை பிரிந்துவிட்டார் என்று திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டது. அதை உண்மையாக்குவதுபோல் மீடியாக்களுக்கு ஒரு தகவலைக் கொடுத்திருக்கிறார் பாலாஜி மோகன்.
“ எனது நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், எனது விவாகரத்து குறித்து வதந்திகள், யூகங்கள் மூலம் நீங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பு நானே தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடைசி வரை சமரசத்திற்கு முயன்றும் பலனளிக்காத காரணத்தால், 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்த கொண்டிருந்த நானும் எனது முன்னாள் மனைவியும், அதிகாரபூர்வமாக பரஸ்பரம் விவாகரத்துப் பெற்றிருக்கிறோம். சட்டரீதியான அனைத்து விஷயங்களும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டன. நாங்கள் அவரவர் பாதைகளில் பயணிப்பதற்கு இந்த ஆரோக்கியமான பிரிவே சிறந்த தீர்வு. தொடர்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி!”
என்று தன்னுடைய திருமண பந்தம் முறிந்துவிட்ட தகவலை தானே வலிய ஊடகங்களுக்கு தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜிமோகன். இது ஒரு பக்கம் இருக்க, மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறார் பாலாஜி மோகன்.