'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வருடங்களாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்ப்படங்கள் கலந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அவற்றில் பல திரைப்பட விழாக்கள், அங்கீகரிக்கப்பட்ட விருது விழா என் சொல்லமுடியாது. என்றாலும் அந்த திரைப்பட விழாக்கள் வெளிநாட்டில் நடைபெறுவதினாலேயே அதை பெருமைக்குரியதாக எண்ணுகின்றனர் நம்ம ஊர்கலைஞர்கள்.
'தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்' என்ற பெருமையோடு சமீபத்தில் வெளிவந்த படம் 'மிருதன்'. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்தை இயக்கியவர் 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன். இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் ஸோம்பி கதைகள் பிரபலமானவை. அது மட்டுமல்ல அங்கே அவை அவுட்டேட்டட் ஆகியும் விட்டன.
இந்நிலையில், தமிழில் வெளிவந்த முதல் ஹாரர் படம் என்ற பெருமையோடு 'மிருதன்' படம் வெளியானது. அதனாலேயே அப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இப்படம் கனடாவில் நடைபெறவிருக்கும் 'ஃபேன்டஸியா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலி'ல் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருக்கிறது. இந்தத் தகவலை ஜெயரம் ரவியே தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.