இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தொப்பி படத்தில் நாயகியாக நடித்தவர் ரக்ஷா ராஜ். அதன்பிறகு தற்போது நிதின் சத்யா நாயகனாக நடித்துள்ள பாண்டியோட கலாட்டா தாங்கல என்ற படத்தில் நடித்துள்ளார். எஸ்.டி.குணசேகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரக்ஷா ராஜ்க்கு காமெடி கலந்த கதாநாயகி வேடமாம்.
இதுபற்றி அவர் கூறுகையில், தொப்பி படத்திற்கு பிறகு படங்கள் இல்லாததால் நான் கலைநிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வந்தேன். அப்போது ஒருமுறை சென்னையில் ஒரு புரோக்கிராமிற்காக வந்தபோது பாண்டியோட கலாட்டா தாங்கல படத்தோட டைரக்டர் குணசேகரன் சார் என்னை சந்தித்து கதை சொன் னார். கதை நன்றாக இருந்தது. உடனே கமிட்டாகி விட்டேன்.
இந்த படத்தில் நிதின்சத்யாவுடன் இமான் அண்ணாச்சி, மனோபாலா, மயில்சாமி, சிங்கம்புலி, யோகிபாபு என ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். அதனால் இந்த காமெடி படத்தில் எனக்கும் காமெடி காட்சிகளில் நடிக்க சான்ஸ் கிடைத்திருக்கிறது. அதோடு, டைரக்டர் குணா சார் கூல்மேன். ஸ்பாட்டில் அவரை மாதிரி ஒரு கூல்மேனை நான் பார்த்ததில்லை. எத்தனை டேக் வாங்கினாலும் பொறுமையாக கூலாக இருந்து வேலை வாங்கினார். அதனால்தான் என்னால் இந்த படத்தில் காமெடி காட்சிகளில் நன்றாக நடிக்க முடிந்தது என்கிறார் ரக்ஷாராஜ்.