அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீராம். தற்போது சோலோ ஹீரோவாக பிசியாகிவிட்டார். பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்த பிறகு அவரின் இமேஜ் உயர்ந்து தற்போது 4 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கும் பைசா என்ற படத்தில் குப்பை பொறுக்கும் இளைஞனாக நடிக்கிறார். இது குப்பைகளால் ஏற்படும் தீமைகளை விவரிக்கும் படம். அடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் சகா என்ற படத்திலும், வேலு விஸ்வநாத் என்பவர் இயக்கும் கபே என்ற படத்திலும் நடிக்கிறார். இவைகள் தவிர தரைடிக்கெட் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீராம் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நான் இப்போது ஹீரோவாக நடிக்கிறேன். இதற்காக எனது தாய், தந்தைக்கு நன்றி. அவர்கள்தான் பக்கத்திலிருந்து என்னை உருவாக்கியவர்கள். தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்தாலும் நான்கும் வெவ்வேறு விதமான கதைகள், கேரக்டர்கள்.
பாபநாசம் படத்தில் நடித்த போது கமல் சார் என்னை சேர்மதுரை என்று செல்லமாக அழைப்பார். அந்த படத்தின் கேரக்டர் பெயர் அது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக நினைத்து நடிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னார். அதை மனதில் வைத்து எனது நடிப்பு பயணத்தை தொடர்கிறேன். நான் நடித்த வஜ்ரம், கமர்கட்டு படங்கள் சரியாக போகவில்லைதான். ஆனாலும் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். படம் வெற்றி தோல்வி, ஆண்டவன் கையிலும், ரசிகர்கள் கையிலும் இருக்கிறது. நான் என் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறேன். என்கிறார் ஸ்ரீராம்.