தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் வித்யூலேகா ராமன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டான இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமானார். நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் அறிமுகமான இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், மாஸ், வேதாளம், உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் வளர்ந்து வருகிறார்.
வித்யூலேகாவின் உறவு பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக அந்த பெண்ணுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டார். அவர் தேர்வு செய்த நாடு ஆஸ்திரியா. மணப்பெண் உள்பட தோழிகள் 5 பேருடன் 5 நாள் சுற்றுலாவாக ஆஸ்திரியா சென்றார். அங்குள்ள வியன்னா நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வந்தார்.
சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப ஓட்டலை காலி செய்தார். ஓட்டலில் செக்அவுட் செய்தபோது அவரது பாஸ்போர்ட், விசா, பணம், உள்ளடக்கிய கைப் பை பத்திரமாக இருந்தது. வெளியில் வந்து பார்தால் கை பையை காணவில்லை. ஓட்டலின் லாபியில் இருந்த 15 நிமிடத்தில் கை பை காணாமல் போயிருந்தது.
திடுக்கிட்ட வித்யூலேகா ஓட்டல் மானேஜரிடம் விஷயத்தை கூறினார். அங்கிருந்த சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் ஒருவன் வித்யூலேகாவிடம் அட்ரஸ் விசாரிப்பது போன்று கவனத்தை திசை திருப்புவதும், இன்னொருவன் கைப் பையை எடுத்துக் கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது. பணத்தை திருட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். ஆனால் அதற்குள் பாஸ்போர்ட்டும், விசாவும் இருந்தது வித்யூலேகாவின் துரதிர்ஷ்டம்.
உடனடியாக வித்யூலே டுவிட்டரில் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சார் சுஷ்மா சுவராஜ் மற்றும் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார். அங்குள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள் அவருக்கு தற்காலிக விசாவும், பாஸ்போர்ட்டும் வழங்க ஏற்பாடு செய்தனர். விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். தற்காலிக பாஸ்போர்ட், விசா கையில் கிடைத்து திட்டமிட்டபடி இன்று வியன்னாவிலிருந்து இந்தியா திரும்புகிறார் வித்யூலேகா.