'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
தீபாவளி, பொங்கல் என முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் அஜித்தின் படங்கள் வெளியாகி வரும் நிலையில், சிவா இயக்கத்தில் அவர் நடிக்கயிருக்கும் 57வது படத்தையும் வருகிற பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அப்படத்தின் ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் கடந்த சில மாதங்களாக துரிதமாக நடந்து வரும் நிலையில், ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால் தற்போது நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், பீப் சாங் விவகாரத்தில் சிக்கி சரிந்து போன தனது மார்க்கெட்டை இந்த படத்தை வைத்து மீண்டும் உயர்த்தி விட வேண்டும் என்று அதிக டயம் எடுத்து பாடல்களை உருவாக்கி வருகிறாராம் அனிருத். குறிப்பாக, வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோளுமா பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியதை போன்று இந்த படத்திலும் ஒரு பாடல் வேண்டும் என்று அஜித் கேட்டுக்கொண்டதால் ஒரேயொரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணி விட்டாராம் அனிருத்.
அதோடு, இந்த 57வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது என்பது உறுதியாகி விட்டபோதும், இன்று மே 5-ந்தேதிதான் அந்த கம்பெனி தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கான அக்ரிமென்டில் கையெழுத்து போடுகிறாராம் அஜித். இன்றைய தினத்தில் அஜித், சிவா உள்பட பல முக்கிய டெக்னீசியன்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறதாம். தனது படங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய விசயங்களை வியாழக்கிழமைகளில் முடிவெடுக்கும் அஜித், இந்த 57வது படத்திலும் அந்த செண்டிமென்டை தொடர்கிறார்.