கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் ஹாட் ஸ்டாரான சன்னி லியோன், 'மஸ்திஜாதே' படத்திற்கு பிறகு முதன்மை ரோலில் நடித்துள்ள படம் 'ஒன் நைட் ஸ்டேண்ட்'. ஜாஸ்மின் மோசஸ் டிசோசா இயக்கும் இப்படம் இந்தவாரம் திரைக்கு வர இருக்கிறது. இப்படம் பற்றியும், தன்னைப்பற்றியும் சன்னி லியோன் என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்...
'ஒன் நைட் ஸ்டேண்ட்' படத்தில் நடிக்க என்ன காரணம்.?
'ஒன் நைட் ஸ்டேண்ட்' படம் முற்றிலும் வித்தியாசமான படம். இதற்கு முன்னர் நான் இப்படி ஒரு படத்தில் நடிக்கவில்லை. இந்தப்படத்தின் கதையை நான் கேட்டபோது எனக்கு புதிதாக தெரிந்தது, கதையை என்னை இப்படத்தில் நடிக்க தள்ளிவிட்டது. அந்தளவுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான படம் இது. அதனால் தன் இந்தப்படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.
'ஒன் நைட் ஸ்டேண்ட்' எந்தமாதிரியான படம்.?
இப்படத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ஒருநாள் இரவில் ஒரே அறையில் தங்கும்படியான சூழல் வருகிறது. அதனால் அவர்கள் இருவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் படம். ஒரு பெண்ணின் தவறான முடிவால் ஆணுடன் இரவில் ஒரே அறையில் தங்குவதால் என்ன நிகழும் என்பதை சொல்கிற படம்.
உங்கள் பார்வையில் 'ஒன் நைட் ஸ்டேண்ட்' பற்றி சொல்லுங்க.?
நீங்கள் தனி ஆள் என்றால் 'ஒன் நைட் ஸ்டேண்ட்' போன்ற சம்பவங்கள் தவறில்லை என்று தான் நான் சொல்வேன். அதேசமயம், உங்களுக்காக கணவரோ அல்லது மனைவியோ, காதலர்களோ அல்லது உங்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்கள் என்றால் அப்போது இதுபோன்றதோறு சம்பவங்கள் தவறு என்று தான் சொல்வேன். ஒருவேளை நீங்கள் அதை பொருட்படுத்தவில்லை என்றால் உங்கள் அன்பிற்குரியவர்களை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் வாழ்க்கையில் சோகம் ஏதும் நிகழ்ந்ததா.?
என் வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்துள்ளது. அதெல்லாம் ஏன் நடந்தது என்று அவ்வப்போது நினைப்பது ஒன்று. வாழ்க்கையில் தோல்வியோ அல்லது வருத்தப்படும் படியான சம்பவங்களோ ஏதாவது நடந்தால் அதைப்பார்த்து ஒருபோதும் நான் பயந்தது கிடையாது. அதிலிருந்து எப்படியாவது மீண்டு வரத்தான் முயற்சிப்பேன். எனது குடும்பத்தார் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். என்னுடைய படங்கள் சரியாக போகவில்லை என்றால் கூட நான் வருத்தப்படுவேன், பின்னர் அதிலிருந்து சீக்கிரம் மீண்டு வந்துவிடுவேன். ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் வாழ்க்கை.
வருங்காலங்களில் கான்களுடன் நடிப்பீர்களா.?
மூன்று கான்களுடன் உறுதியாக நடிப்பேன், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கான்களிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறேன். சல்மான் அற்புதமான மனிதர். மூன்றுபேருடன் நடிக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன். அதேசமயம், கான்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் மிக்க மகிழ்ச்சி.
உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்ன.?
'ஒன் நைட் ஸ்டாண்ட்' படத்திற்கு பிறகு 'பீமான் லவ்' என்ற படத்தில் நடிக்கிறேன். இதுதவிர, என் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் டிவி தொடரிலும் நடிக்கிறேன். ஷாரூக்கான் உடன் 'ராயீஸ்' படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளேன். முதன்முறையாக ஷாரூக்கான் உடன் இணைந்து ஆடியது மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ஷாரூக்கிற்கு ஒருமுறை அல்ல பலமுறை நன்றி சொல்வேன்.
இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.