அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் நாயகியான இவர் தமிழில் நடித்துள்ள முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், விஜயசேதுபதி, விக்ரம்பிரபு போன்ற நடி கர்கள் நடிக்கும் புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் விஜயசேதுபதி தனது படத்திற்கு மஞ்சிமா மோகன் வேண்டும் என்று கேட்டே வாங்கினாராம்.
அதற்கு முக்கிய காரணம், மலையாளத்தில் மஞ்சினா மோகன் நாயகியாக நடித்துள்ள ஒரு வடக்கன் செல்பி அவருக்கு ரொம்ப பிடித்தமான படமாம். அதில மஞ்சிமா கொடுத்துள்ள பர்பாமென்ஸ் இயல்பாக இருந்தினால்தான் தனது படத்துக்கு கே.வி.ஆனந்த் நாயகி தேடியபோது, மஞ்சிமா மோகனின் பெயரை முன்வைத்தாராம் விஜயசேதுபதி. அப்போது வேறு சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த கே.வி.ஆனந்தும், மஞ்சிமா சிறந்த நடிகை என்பதோடு, கெளதம் மேனன் படத்தில் நடித்திருப்பதால், மறுபேச்சின்றி அவரை புக் பண்ணிவிட்டாராம்.