ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அமீர்கானை சந்தித்த சிறுவன் ஒருவன் மரணத்தை தழுவியது அமீர்கானை வருத்தப்பட வைத்துவிட்டது. ப்ரோகேரியா என்பது சிறுவயதிலே வயதானவர்களை போல தோற்றத்தை கொண்டுவந்துவிடும் வித்தியாசமான நோய். இன்னும் சரியாக சொன்னால் அமிதாப் 'பா' படத்தில் ஏற்று நடித்திருந்தாரே அது இந்த நோயால் பாதிக்கப்பட்ட கேரக்டரைத்தான் பிரதிபலித்தது.. அப்படி ப்ரோகேரியா என்கிற நோயால் பாதிக்கப்பட்ட நிகால் பிட்லா என்கிற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் நான்கு மாதங்களுக்கு முன் அமீர்கானை சந்திக்க வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்தான்.
இது அவனுடையை புகைப்படத்துடன் மாறி மாறி ஷேர் செய்யப்பட்டு இறுதியில் அமீர்கானின் கவனத்துக்கும் வந்தது. உடனே அந்த சிறுவனை வரவழைத்து சந்தித்து அவனுடன் சில மணி நேரங்கள் செலவிட்டு அவனது ஆசையை தீர்த்து வைத்தார் அமீர்கான். இந்த சந்திப்பின்போது தான் வரைந்திருந்த பிள்ளையார் படத்தை அமீர்கானுக்கு பரிசளித்தான் அந்த சிறுவன். அந்த சிறுவனுக்கு மறக்கமுடியாத நாளாக அது அமைந்துவிட்டது. ஆனால் இப்போது நோயின் தீவிரம் தாங்கமுடியாமல் நேற்று இரவு அந்த சிறுவன் மரணம் அடைந்துவிட்டான்.. தனது வாழ்நாளில் மறக்கமுடியாத அந்த ரசிகனின் மரணம் அமீர்கானை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாம்.