பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. ஆனால் அந்தப்படம் வெளிவரும் முன்னரே மெளனம் பேசியதே படம் வெளியாக அதுவே அவரது முதல்படமாக அமைந்தது. தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துவிட்டார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்தார். அவர் சினிமாவுக்கு வந்து சுமார் 13 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது பிஸியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை த்ரிஷாவுக்கு இன்று(மே.4ம் தேதி) 33வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை தனது அம்மா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நட்சத்திர ஹோட்டலில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் த்ரிஷா நம்மிடம் பேசியதாவது... ''சினிமாவில் இத்தனை ஆண்டுகள் நீடிக்கிறேன் என்றால் முழுக்க முழுக்க ரசிகர்கள் தான் காரணம். அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ப்ரியதர்ஷன், என்னை வைத்து படம் பண்ணிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. ஆரம்பகாலத்தில் நான் நடித்த பல படங்கள் என்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றன. நல்ல கதைகள் எப்போதும் ஜெயிக்கும், விரைவில் நான் நடித்துள்ள 'நாயகி' படம் வெளியாக இருக்கிறது. இந்த 'நாயகி' படம் என்னை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.