இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. மே 20-ந்தேதி அல்லது மே 27-ந்தேதி கண்டிப்பாக படம் திரைக்கு வந்து விடும் என்கிறார் அப்படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகன்.
மேலும் படம் குறித்து அவர் கூறுகையில், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் நன்றாக வந்துள்ளது. கேரவன் ஓனராக நடித்துள்ள கவுண்ட மணி லவ் மேரேஜ்க்கு உதவி செய்கிறார். படத்தில் அரசியல் டச் இருக்கும். ஆனால் எந்த அரசியல்வாதியையோ, அரசியல் கட்சியையே அட்டாக் பண்ண வில்லை. கவுண்டமணியின் வழக்கமான பாணியில் அந்த வசனங்கள் பொதுவானதாக இருக்கும். மேலும் சோசியல் நெட் ஒர்க்கையும் படத்தில் அதிகமாக பயன்படுத்துவார் கவுண்டர். அவரை உடனுக்குடன் போட்டோ எடுத்து இணையதளங்களில் அப்டேட் செய்வதற்காகவே ஒரு உதவியாளரை நியமித்திருப்பார். அந்த வேடத்தில் பாடகர் வேல்முருகன் நடித்துள்ளார். அந்த வகையில், இந்த படத்தில் இளைஞர்களுக்கு பிடித்தமான கவுண்டமணியை பார்க்கலாம்.
அதோடு படத்தில் கவுண்டமணிக்கு ஒரு ஓப்பனிங் பாடலும் உள்ளது. படி படி -என்று தொடங்கும் அந்த பாடல் மாஸாக இருக்கும். இன்னொரு பாடல், கோடம்பாக்கம் மறுபெயர் கோலிவுட்டுடா, என் வாகனத்தில் ஏறினவன் ஹாலிவுட்டுடா -என்று தொடங்கும், அதேமாதிரி இன்னொரு பாடலில் வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்திருக்கும். ஆக, தனது பாணியில் நக்கல் நைய்யாண்டி கலந்து நகைச்சுவையாக நடித்திருக்கிறார் கவுண்டமணி. படத்தின் முதல் பாதி சென்னையிலும், இரண்டாவது பாதி மதுரையிலும் நடப்பதால் மதுரை டச் படத்தில் அதிகமாக இருக்கும்.
அதோடு ஒரு சண்டை காட்சியிலும் நடித்துள்ளார் கவுண்டமணி. திலீப் சுப்பராயன் பயிற்சி கொடுத்துள்ள அந்த சண்டை காட்சி மிக யதார்த்தமாக இருக்கும். அதாவது தன்னை காத்துக்கொள்ள ஒருவன் போராடுவது போல் இயல்பாக உள்ளது. காதலர்களை சேர்த்து வைக்கும் இதுபோன்ற யுனிவர்சல் கதைகளில் பல ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். அவரவர் பாணியில் கதைகள் உருவானது போன்று கவுண்டமணி பாணியில் இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன்.
முக்கியமாக, படத்தில் என்ட் கார்டு போடுவதற்கு முன்பு, இன்று முதல் எனது கிளை ஆந்திராவில் ஆரம்பம் என்பார் கவுண்டமணி. காரணம், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியா உள்ளது. படத்தின் கதை அனைத்து ஏரியாவுக்கும் பொருந்தக்கூடியது என்பதால் 4 பாகங்கள் வரை இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதில் நடிக்க கவுண்டமணியும் தயாராக உள்ளார் என்று கூறும் டைரக்டர் கணபதி பாலமுருகன், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், இப்போதே இரண்டாம் பாகத்திற்கான வேலைகளையும் தொடங்கி விட்டேன் என்று உற்சாகமாக சொல்கிறார்.