'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முதல் படம் தோல்வியடைந்து விட்டால் அந்த நடிகைகளை சினிமா உலகம் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டி விடும். ஆனால், கீர்த்தி சுரேஷ் விசயத்தில் அது நடக்கவில்லை. அவர் தமிழில் நடித்த முதல் படமான இது என்ன மாயம் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வெளியான ரஜினிமுருகன் சூப்பர் ஹிட்டாகி கீர்த்தி சுரேஷை காப்பாற்றி விட்டது. அதோடு, விஜய்யுடன் நடிக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் சினிமா கேரியரில் ஒரு பெரிய மேஜிக்கே நடந் துள்ளது.
மேலும், விஜய்யுடன் நடிக்கும் படத்தில் இதுவரை நடித்ததை விட சூப்பர் பர்பாமென்ஸ் கொடுத்து நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்து விட வேண்டும் என்று தயாராகிக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன்காரணமாக, டைரக்டர் பரதனை ஒருநாள் தனது அம்மா மேனகாவுடன் சந்தித்து, முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளைப்பற்றி கேட்டதோடு, அந்த வசனங்களையும் ஒரு காப்பி எடுத்து வந்துவிட்ட கீர்த்தி சுரேஷ், அதை மனப்பாடம் செய்து விட்டாராம். அதோடு, அம்மாவின் ஆலோசனைபடி ரிகர்சலிலும் ஈடுபட்டிருக்கிறாராம். விஜய்யுடன் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலுமே சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விட வேண்டும் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் ஆசையாக உள்ளதாம். அதற்காகத்தான் முன்னோட்டம் பார்த்து வருகிறாராம் நடிகை.