Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எனக்கு நானே வில்லன் - '24' சூர்யாவின் ஜிலீர் அனுபவம்

03 மே, 2016 - 15:19 IST
எழுத்தின் அளவு:
Suriya-spl-interview-about-24

விக்ரம் குமார் இயக்கத்தில், சூர்யா மூன்று விதமான வேடங்களில் நடித்துள்ள 24 படம் மே 6ம் தேதி வெளியாக உள்ளது. டைம் மிஷன் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லன் சூர்யா தான், அதாவது அவரே வில்லனாகவும் நடித்துள்ளார். சரி 24 படம் இனி சூர்யா என்ன பேசுகிறார் என்று பார்ப்போம்...


* 24 படம் பற்றி?


ஏதாவது புதுசா ஒரு கதை சொல்லணும் என்ற மெனக்கெடல் இந்த படம். விக்ரம்குமார் இதற்கு முன் இயக்கிய படம் மனம், 3 தலைமுறைகள் பற்றிய படம். எல்லாருக்கும் பிடித்திருந்தது. அவர் படங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு களம். 24 படம் எல்லார் மனசிலயும் நிற்கும் படமாக இருக்கும். டைம் பற்றி பல படங்கள் வந்திடுச்சி. இதில், அந்த டைம் டிராவல் கருவியில் எப்படி ஒரு புது இடத்துக்கு கூப்பிட்டு போறார் என்பது விக்ரம்குமாரின் சாமர்த்திய கதை. ரொம்ப சவாலான படம் இது.


* இந்த மாதிரி அறிவியல் சம்பந்தமான கதையை கமர்ஷியல் படமா கொண்டு வர முடியுமா?


விஞ்ஞானத்தை ஒரு சின்ன கருவியா தான் படத்தில் கொண்டு வந்திருக்கோம். இப்படி ஒரு விஷயம் நடந்தால், அவர்களை சுற்றி என்ன வெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கு. என்ன நடக்கும், அந்த 2 கேரக்டருக்குள் என்ன விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள் படத்தில் நிறைய ரசிக்க வைக்கும். 70 சதவீதம் மும்பையில் தான் படப்பிடிப்பு நடத்தினோம்.


* 3 ரோல் நடித்தது பற்றி?


முதலில் 2 ரோல் நடித்தது போதும், இனி வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். இந்த கதை நான்கரை மணிநேரம் இயக்குநர் கதை சொன்னார். 3 கேரக்டரும் வேற வேற வடிவம். அவங்களுக்கான மேக்கப், உடைகள், நடிப்பு வேற மாதிரி இருக்கும். ஆத்ரேயா பவர்புல் ரோல், மணி ரொம்ப அழகான பையன், சேதுராமன் ரோல் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் படத்தில் எல்லா ரோலையும் நான் ரசித்தே நடித்தேன்.


* பல படங்களில் உங்களை (உடலை) வருத்தி நடிக்கிறீங்களே?


இந்த மாதிரி படங்கள் கொடுக்காமல் போய்ட்டேனா குற்ற உணர்ச்சி வரும்னு தோணுது. என்னால் எவ்ளோ நல்ல படம் கொடுக்க முடியுமோ முயற்சிக்கிறேன். கமல் சார் எத்தனை நல்ல படங்கள் கொடுத்து இருக்கிறார். அதைப்போல் என் கேரியரில் நான் எத்தனை நல்ல படங்கள் கொடுத்திருக்கிறேன் என்ற கேள்வி அடிக்கடி வரும். இந்த வயதில் என்னால் எவ்வளவு கஷ்டப்பட முடியுமோ கஷ்டப்படுவேன்.


* தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் சூர்யா பற்றி?


ரெண்டையும் என்ஜாய் பண்றேன். ஒரு திருப்தி இருக்கு. ஏ.வி.எம்.,ல் படம் பண்ணும்போது ஒரு நல்ல அனுபவமும் மரியாதையும் கிடைத்தது. சம்பளம் பேசும்போது குறைத்து கூட பேசினது இல்ல. நடிகர்களை அழைத்து போவது, தங்க வைப்பது, ரிலீஸ் தேதி, 100வது நாள் விழா, நன்றி கடிதம் அனுப்புவது இப்படி எல்லாமே அவங்ககிட்ட கற்றுகொண்டேன். விளம்பர படங்களில் நடிக்கும்போது, பாம்பே மக்கள் பழக்க வழக்கம், வேலை வாங்குறது இப்படி எல்லாமே எனக்குள் வந்திடுச்சினு நினைக்கிறேன்.


* நீங்களே உங்களுக்கு வில்லனாக நடித்தது பற்றி?


ஆத்ரேயா என்ற வில்லன் நான். அவன் தேடல் தான் கதையை அடுத்தடுத்து நகர்த்தி போகும். வசனம் எல்லாமே நல்லாருக்கும். ஒரு ஆள் கோவக்காரனா மட்டும் இல்லாம, புத்திசாலி தனமும் சேர்ந்த ஒரு கேரக்டரில் நான் அதை பிரதிபலிப்பது ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. மேக்கப் கொஞ்சம் வித்யாச அனுபவம். 60 வயசுக்கு மேல நான் எப்படி இருப்பேனோ அந்த லுக் டிரை பண்ணிருக்கோம்.


* உங்க படங்களில் இதெல்லாம் இருக்க கூடாது என்று பாலிஸி எதும் வச்சிருக்கீங்களா?


என் படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டேன். முடிந்தவரை தண்ணி அடிப்பதை படத்தில் தவிர்க்கிறேன். நான் வேலை பார்த்த இயக்குநர்கள் பலர், சீனியராக இருந்திருக்கிறார்கள். சமீபகாலத்தில் தான் அண்ணா, சார் என்று அழைக்கும் இயக்குநர்களோடு வேலை பார்க்கிறேன். நானும் இப்போது சீனியர் சிட்டிசன் ஆகிவருகிறேனு நினைக்கிறேன். முடிந்தவரை நல்ல விஷயங்களை படத்தில் கொண்டு வர முயற்சிப்பேன்.


* போலீஸ் உடையணிந்து நடிக்கும்போது எப்படி உணர்வீர்கள்?


காக்க காக்க படத்துக்கு பிறகு எனக்கு கிடைத்த காவல்துறை நட்பு வட்டாரம், இப்பவும் எனக்கு நடிப்பில் உதவியா இருக்கு. அவங்களை பார்த்து என்னை அந்த கேரக்டரில் பொருத்தி கொள்கிறேன். தீபாவளி, பொங்கல் ஒரு நல்லநாள் எதுவும் அவங்க கொண்டாடுவதில்லை. கடமையோடு வேலை பார்க்கிறாங்க. எப்பவும் மதிக்கிறேன் காவல்துறையை. யூனிபார்ம்கே ஒரு மரியாதை இருக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு.


* நீங்களும் ஜோவும் திரும்ப படத்தில் நடிக்க போறதா செய்தி இருக்கே?


36 வயதினிலே படத்திற்கு பிறகு எந்த கதையும் வரல என்பதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஜோவுக்கு அந்த கவலை வருத்தம் உண்டு. இவ்ளோ நாள் தள்ளிப்போனது ஆச்சர்யமா இருக்கு. மே இறுதியில் அறிவிப்பு வரும், படத்தை ரெடி பண்ணிட்டு இருக்கோம். 3 ஐடியா பேசிட்டு இருக்கோம். எது முதலில் படமா வரும்னு தெரியல.


* ஒரு தம்பியா கார்த்தி பற்றி சொல்லுங்க?


நான் ஓவியனா இருக்க போறேனா, நடிகனா இருக்க போறேனா என்ற காலத்தில் பிறந்தவன் சூர்யா. நடிகனா மக்கள் ஏற்றுக் கொண்ட பிறகு பிறந்தவன் கார்த்தி இந்த வித்யாசத்தை அப்பா அடிக்கடி சொல்வார். கார்த்தி ரொம்ப திறமையானவன், தெளிவா இருப்பான். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவான். ஆனா நான், இவங்க வருத்தப்படுவாங்க, அவங்க ஏதும் நினைப்பாங்களோ என்றெல்லாம் யோசிப்பேன். பருத்திவீரன் என்ற முதல் படத்திலே அவன் நிரூபிச்சிட்டான். அமெரிக்காவில் இரண்டரை வருடம் இருந்ததை மறந்து, மதுரையில் அந்த கேரக்டராவே மாறிப்போய் வாழ்ந்தான். வெட்கப்படாம வீட்லயும் வந்து நடிச்சி காட்டுவான். என்னால இப்ப கூட அது பண்ண முடியாது. என்னைவிட நிறைய படங்கள் பார்ப்பான், படிப்பான், படத்தை அப்படியே புரட்டிபோட்டு கதை சொல்வான். அவன் ஸ்கிரிப்ட் டாக்டர் மாதிரி, மெட்ராஸ், தோழா படங்கள் நல்ல சாய்ஸ்.


* நடிகர் சங்கத்துக்கு உங்க உதவி?


அங்க திரையங்கள் ஒன்று வடிவமைக்கிறாங்க. அதை அப்பா பேரில் கட்டி தரணும் என்று ஆசைப்படுறேன். குடும்பமான ஒரு சூழல் அங்க இருக்கணும் என நினைக்கிறேன். மாதம் 50 லட்சம் வாடகை மூலம் வரும்னு சொல்றாங்க. இளைஞர்கள் நல்லா செயல்படுறாங்க, நல்லது செய்வாங்கனு நம்புறேன்.


* புது இயக்குநர்களோடு வேலை பார்ப்பீர்களா?


நல்ல கதைகள், வித்யாசமா யோசித்து வர்றாங்க பட பட்ஜெட், சம்பளம் இதல்லாம் மனதில் வைத்து நான் நடிக்க முடியுமானு தெரியல, ஆனால் அவர்களை வைத்து நான் படம் தயாரிக்க நினைக்கிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in