தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'தெறி' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. இப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகன் விஜய், நாயகி கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் சதீஷ், இயக்குனர் பரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு மே மாதம் முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. முதல் நாளில் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
'தெறி' படத்தின் மிகப் பெரும் வசூலுக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. பல முன்னணி இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் இயக்கப் போட்டி போட்ட நிலையில் 'அழகிய தமிழ் மகன்' என்ற தோல்விப் படத்தைக் கொடுத்த பரதன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் விஜய்.
பல ஆக்ஷன் படங்களுக்கு இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட பரதன், விஜய் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த முறை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். விஜய் ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷ், விஜய் படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் என இந்தப் படத்தில் சில புது விஷயங்கள் இணைகின்றன. 2017 பொங்கல் தினத்தில் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.