600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ் சினிமாவில் ரஜினி-கமலுக்குப்பிறகு விஜய்-அஜித் ஆகியோர் இருதுருவங்களாக திகழ்கின்றனர். திரைக்கு முன்பு அவர்கள் கடும் போட்டியாளர்களாக தெரிந்தாலும், திரைக்குப்பின்னால் அவர்களுக்கிடையே புரிதலுடன் கூடிய நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. அந்த வகையில், அவர்கள் அடிக்கடி சந்தித்து தங்களது நட்பையும், அன்பையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மே 1-ந்தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகரும் தனது பிறந்த நாள் வாழ்த் துக்களை அஜித்துக்கு தெரிவித்துள்ளார். அதில், அஜித்துக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர்,
அஜித் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பதை குறிப்பிட்டு, சண்டை காட்சிகளுக்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள். இனிவரும் காலங்களில் உடம்பை பாதிக்காத அளவுக்கு ரிஸ்க் எடுங்கள். அவ்வப்போது ரிஸ்க் எடுத்து நடித்து அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்க்கையில் மனசுக்கு கஷ்டமாக உள்ளது என்றும், அஜித் நீங்க எல்லோருக்கும் பிரியாணி செய்து கொடுக்கிறீங்க, நீங்க எங்க வீட்டுக்கு பிரியாணி சாப்பிட குடும்பத்தோடு வரணும் என அஜித்தை கேட்டுக்கொண்டுள்ளார் ஷோபா சந்திரசேகரன். இந்த செய்தி தல அஜித்தின் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.