தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மருது படத்தை தொடர்ந்து விஷால் கமிட்டான படம் ''கத்திச்சண்டை''. சுராஜ் இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு, இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுக்கிறார். கூடவே சூரியும் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடந்தது. விஷால், வடிவேலு, சூரி, இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்களுடன் இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
கத்திச்சண்டை படத்தில் நடிப்பது குறித்து வடிவேலு கூறியுள்ளதாவது... ''இந்த நாள் மிகவும் சிறப்பான நாள். நிறைய ஹிட் கொடுத்த இயக்குநர் உடன் திரும்பவும் வேலை பார்க்க போகிறேன். இது எல்லாவற்றுக்கும் காரணம் நடிகர் சங்கத்தின் அடுத்தடுத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும், ஹீரோவுக்கு பக்கபலமாக இருக்க கூடிய எந்த ரோலிலும் நடிப்பேன் என்றவரிடத்தில் அரசியல் குறித்த கேள்வி கேட்டபோது அய்யய்யோ அதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்'' என்றார்.
சூரி கூறியதாவது... ''விஷால் உடன் எனக்கு இது நான்காவது படம். அதோடு வடிவேலு உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலாய் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் சுராஜ் கூறியதாவது... ''என் மீது நம்பிக்கை வைத்து விஷால் இந்தப்படத்தை கொடுத்துள்ளார். காமெடி கம் ஆக்ஷ்ன் படமாக பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும். தலைநகரம், மருதமலை படத்திற்கு பிறகு வடிவேலு உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன். இப்படத்தில் வடிவேலு டாக்டர் பூத்ரி என்ற ரோலில் கலக்க உள்ளார் என்றார்.
விஷால் பேசும்போது... ''சுராஜ் உடன் நான் இணையும் முதல் படம் இது. நல்ல கதையம்சம் உள்ள இப்படம் இருக்கும். என்னுடன் ஜெகபதி பாபு நடிக்கிறார். திமிரு படத்திற்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் வடிவேலுடன் நடிக்கிறேன். முதன்முறையாக தமன்னா எனக்கு ஹீரோயினாக நடிக்கிறார். மே 9ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹிப்-ஹாப், ஆதி, ரிச்சர்ட் போன்றவர்கள் இசை மற்றும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றுகிறார்கள். தெரிந்த முகங்களுடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. இங்கு யாருக்கும் எந்த பொறாமையும் இல்லை, விருப்பப்பட்டு அனைவரும் வேலைபார்க்கும் படம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.