Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவாகவும், காமடியனாகவும் நடிப்பேன் - வடிவேலு

02 மே, 2016 - 16:11 IST
எழுத்தின் அளவு:
I-am-ready-to-do-Hero-as-well-as-comedian-says-Vadivelu

மருது படத்தை தொடர்ந்து விஷால் கமிட்டான படம் ''கத்திச்சண்டை''. சுராஜ் இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு, இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுக்கிறார். கூடவே சூரியும் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடந்தது. விஷால், வடிவேலு, சூரி, இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்களுடன் இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.




கத்திச்சண்டை படத்தில் நடிப்பது குறித்து வடிவேலு கூறியுள்ளதாவது... ''இந்த நாள் மிகவும் சிறப்பான நாள். நிறைய ஹிட் கொடுத்த இயக்குநர் உடன் திரும்பவும் வேலை பார்க்க போகிறேன். இது எல்லாவற்றுக்கும் காரணம் நடிகர் சங்கத்தின் அடுத்தடுத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும், ஹீரோவுக்கு பக்கபலமாக இருக்க கூடிய எந்த ரோலிலும் நடிப்பேன் என்றவரிடத்தில் அரசியல் குறித்த கேள்வி கேட்டபோது அய்யய்யோ அதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்'' என்றார்.


சூரி கூறியதாவது... ''விஷால் உடன் எனக்கு இது நான்காவது படம். அதோடு வடிவேலு உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலாய் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


இயக்குநர் சுராஜ் கூறியதாவது... ''என் மீது நம்பிக்கை வைத்து விஷால் இந்தப்படத்தை கொடுத்துள்ளார். காமெடி கம் ஆக்ஷ்ன் படமாக பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும். தலைநகரம், மருதமலை படத்திற்கு பிறகு வடிவேலு உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன். இப்படத்தில் வடிவேலு டாக்டர் பூத்ரி என்ற ரோலில் கலக்க உள்ளார் என்றார்.


விஷால் பேசும்போது... ''சுராஜ் உடன் நான் இணையும் முதல் படம் இது. நல்ல கதையம்சம் உள்ள இப்படம் இருக்கும். என்னுடன் ஜெகபதி பாபு நடிக்கிறார். திமிரு படத்திற்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் வடிவேலுடன் நடிக்கிறேன். முதன்முறையாக தமன்னா எனக்கு ஹீரோயினாக நடிக்கிறார். மே 9ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹிப்-ஹாப், ஆதி, ரிச்சர்ட் போன்றவர்கள் இசை மற்றும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றுகிறார்கள். தெரிந்த முகங்களுடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. இங்கு யாருக்கும் எந்த பொறாமையும் இல்லை, விருப்பப்பட்டு அனைவரும் வேலைபார்க்கும் படம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in