‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜயகாந்த் நடித்த பெரும்பாலான ஆக்சன் படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை துரத்தி துரத்தி வேட்டையாடுவது போல்தான் நடித்திருப்பார். இந்தியாவிற்குள் அத்து மீறி நுழைந்த தீவிரவாதிகள் மற்றும் எல்லையில் ஆக்ரமிப்பு செய்யும் தீவிரவாதிகள் என அவர்களை பிடித்து துவம்சம் செய்து வருவதைதான் பெரிய டிரண்டாக வைத்து வந்தார் விஜயகாந்த். அந்த வகையில் அவரது படங்கள் ஆக்சன் பிரியர்களுக்கு பெரிய தீனி போட்டு வந்தன. அர்ஜூனும் தேசப்பற்று கொண்ட சில படங்களில் நடித்திருந்தபோதும் விஜயகாந்த் அளவுக்கு தீவிரவாதிகளை வேறருத்ததில்லை.
மேலும், அவர்களுக்குப்பிறகு இந்தியா பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஆக்சன் கதைகள் தயாரிக்கப்படுவதும் குறைந்தது. ஆனால், தற்போது ரோஜா படத்தை அடுத்து தனது புதிய படத்தை காஷ்மீரில் முகாமிட்டு எடுக்கப்போகிறார் மணிரத்னம். இந்த படமும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட கதைதானாம். அதேபோல் விக்ரம் பிரபு நடித்துள்ள வாகா படமும் இந்தியா -பாகிஸ்தான் எல்லையில்தான் நடந்துள்ளது. அந்த வகையில், இப்போது திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கயிருக்கும் கருடா படமும் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை சம்பந்தப்பட்ட கதையில்தான் தயாராக உள்ளது. இந்த படத்தில் பாகிஸ்தானுக்குள்ளும் புகுந்து அடிக்கிறாராம் விக்ரம். அதன்காரணமாக, பாகிஸ்தான் செட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.