மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகும் இப்படம் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்க சாய் தரண் தேஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். மெகா ஸ்டார் குடும்ப வாரிசும் வளர்ந்து வரும் நடிகருமான சாய் தரண் தேஜ் அண்மையில் சிரஞ்சீவியின் 150வது படபூஜையில் கலந்து கொண்டார். மேலும் தற்போது தனது சுப்ரீம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் சாய் தரண் சிரஞ்சீவியின் 150வது படத்தில் சிறிய வேடத்திலாவது நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். மே 5ல் திரைக்கு வரும் சுப்ரீம் படத்தில் சாய் தரண் தேஜுடன் ராக்ஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியின் புகழ்பெற்ற பாடல் ஒன்றையும் ரீமேக் செய்து சாய் தரண் தேஜ் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.