இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம் மே 6ல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவருகின்றது. தெலுங்கில் மனம் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளதால் தெலுங்கு திரை உலகிலும் 24 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால் தமிழகத்தைப் போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் 24 படத்தின் புரமோஷனில் சூர்யா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். ஐதராபாத்தில் 24 படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட சூர்யா டோலிவுட்டின் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் மூன்று படத்திற்கான கதைகள் கேட்டுள்ளதாகவும் அவை இன்னும் பேச்சு வார்த்தை நிலையிலேயே இருப்பதாகவும் விரைவில் திரிவிக்ரம் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.