தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஷங்கர் இயக்கி கொண்டு இருக்கும் படம் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0. இந்தப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் டில்லி நேரு அரங்கத்தில் எடுத்து முடித்து, படத்தின் குழுவினர்கள் தற்போது பொலிவியாவிற்கு சென்றிருக்கின்றனர். 45 நாட்களாக டில்லியில் கடும் வெயிலுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதில் ரஜினி - அக்ஷய் மோதும் சண்டைக் காட்சிகள், எமி ஜாக்சன்- ரோபோக்கள் பங்கேற்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன.இதையடுத்து ஷங்கர் இந்தப்படத்தை 2017ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய போவதாக செய்தி வெளியானது. 20 ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான முதல் படம் '' முதல்வன்''. அதற்கு பிறகு இந்தப்படம் இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. எந்திரன் படம் 2010ல் அக்டோபர் 1 ல் வெளிவந்து ஹிட் கொடுத்தது. இதனால் இந்தப்படத்தையும் ஷங்கர் விழாக்கள் இல்லாத நாட்களில் தான் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது. இந்தப்படம் 2017ல் தான் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதற்கிடையில் இப்படம் ரம்ஜானுக்கு வெளியாக போவதாக சில நாட்களுக்கு முன் செய்தி கசிந்தது குறிப்பிடத்தக்கது.