அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், மதயானைக்கூட்டம் படத்தை தயாரித்த பிறகு பென்சில் என்ற படத்தில் நாயகனாக முதன்முறையாக நடித்தார். சாட்டை படம் போன்று பள்ளி மாணவ-மாணவிகளின் பிரச்சினையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவானது. மணிநாகராஜ் இயக்கிய இந்த படம் வேகமாக வளர்ந்தபோதும் பின்னர் வெளியாக முடியாத பிரச்சினைகளில் சிக்கிக்கொண் டது. ஆனபோதும் மனம் தளராத ஜி.வி.பிரகாஷ்குமார், அதன்பிறக டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களில் நடித்தார். அந்த இரண்டுமே அவருக்கு ஹிட்டாக அமைந்ததால் இப்போது புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
என்றாலும், தனது முதல் படமே இன்னும் வெளியாகவில்லை என்கிற வருத்தம் அவரது மனதளவில இருந்து வந்தது. அதேபோல், இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த ஸ்ரீதிவ்யாவும், அந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சில தேதிகளில் அந்த படம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல்-22ல் வெளியாகி விடும் என்றனர். ஆனால் சில காரணங்களால் பின்வாங்கிய பென்சில் படம் மே 13-ந்தேதி திரைக்கு வருவது உறுதியாகியிருப்பதாக சொல்கிறார்கள். இப்போது ஜி.வி.பிரகாஷ் வெற்றிப்பட நாயகனாகி விட்டதால் முன்பு திட்டமிட்டதை விடவும் அதிக தியேட்டர்களில் பென்சில் ரிலீசாகிறதாம்.