'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வசந்தபாலன் இயக்கிய முதல் படம் ஆல்பம். அந்த படத்தின் தோல்வி காரணமாக டைரக்டர் ஷங்கர் படங்கள் பணியாற்றி வந்தவர், பின்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெயில் என்ற படத்தை இயக்கினார். அதற்கடுத்து அங்காடித்தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கினார். இதில், அவர் நாடகக்கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கதையில் சித்தார்த்-பிருத்விராஜை வைத்து இயக்கிய காவியத்தலைவன் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதனால் அடுத்தபடியாக வசந்தபாலன் இயக்கும் படம் குறித்த தகவல் இன் னும் தெரியவில்லை.
இந்த நிலையில், தற்போது அவர், பரத், ராஜகுமாரனை வைத்து விஜய் மில்டன் இயக்கும் கடுகு படத்தில் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. டைரக்டர் ராஜகுமாரன் நாயகனாகவும், பரத் வில்லனாகவும் நடிக் கும் இந்த படத்தில் வசந்தபாலனுக்கு படம் முழுக்க வருவது போன்ற ஒரு போலீஸ் அதிகாரி வேடமாம். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள். ஆக, நடிகர்களாகியிருக்கும் கே.எஸ்.ரவிக் குமார் உள்ளிட்ட சில பிரபல டைரக்டர்கள் வரிசையில் வசந்தபாலனின் பெயரும் தற்போது இடம்பிடித்திருக்கிறது.