இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாணயம் படத்திற்கு பிறக நான்கு வருடங்களாக சரியான கதைகள் அமையாமல் போராடிக்கொண்டிருந்த சிபிராஜ் 2014ல் நடித்த படம்தன் நாய்கள் ஜாக்கிரதை. ஒரு புதுவித ஓப்பனிங் கொடுக்க வேண்டும என்று காத்திருந்தவர் அந்த படத்தில் நாயுடன் என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. அதை யடுத்து போக்கிரிராஜாவில் காமெடி கலந்த நெகடீவ் ரோலில் நடித்த சிபிராஜ்க்கு அந்த படமும் ஓரளவு நல்ல பெயரையே வாங்கிக்கொடுத்தது. அதனால் தற்போது ஜாக்சன் துரையில் புதிய உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், வித்தியாசமான ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிபிராஜ்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி என இரண்டு ஜோடிகள் இருக்கிறார்களாம். அப்படி இருந்தும் படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லையாம். அதிரடியான காட்சிகள்தான் உள்ளதாம். அதோடு, ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான பர்பாமென்சையும் கொடுத்துவிட்ட சிபிராஜ், இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு பன்முக கலைஞனாக தன்னை பிரதிபலித்திருக்கிறாராம. அந்த வகையில், ஜாக்சன்துரை சிபிராஜ்க்கு மிக முக்கியமான படமாக இருக்குமாம்.