ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் தனி மனிதனாக நுழைந்து இன்று தரணியெங்கும் ரஜினிக்கு அடுத்து மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள நடிகர் அஜித்குமார்.
தன் படங்களைப் பற்றிப் பேசியதில்லை, தன்னைப் பற்றிப் பேசியதில்லை, எந்த ரசிகர் மன்றமும் கடந்த பல ஆண்டுகளாக இல்லை, இப்படி எத்தனையோ இல்லைகளை வைத்திருந்தாலும் ரசிகர்கள் இவர் மீது எல்லை கடந்த அன்பை வைத்திருக்கிறார்கள்.
வெற்றி, தோல்வி இரண்டும் ஒரு மனிதனை வாழ்த்தவும் செய்யவும், வீழ்த்தவும் செய்யும். ஆனால், வாழ்த்து வந்தால் தலைக்கனம் இல்லாமலும், வீழ்ச்சி வந்தால் தலைக்குனிவு இல்லாமலும் தன்னுடைய வேலையை யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல் செய்து வருபவர் அஜித்.
இவருடைய எளிமையும், பண்பும்தான் இவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாலும் மிகப் பெரிய வெற்றி என்று பார்த்தால் அவை குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும். இருந்தாலும் வெற்றி, தோல்வி எதுவுமே பாதிக்காத ஒரு நடிகராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். இப்படிப்பட்டவரின் நடிப்பில் வெளிவந்த அசத்தலான சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
அமராவதி
90களின் துவக்கத்தில் மிகப் பெரிய அளவில் புதுமுகங்கள் அறிமுகமானதில்லை. அப்படியே வந்த ஒரு சிலரும் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், நாயகனாக நடித்த தன்னுடைய முதல் படத்திலேயே யார் இந்த அழகன் என பலரது கவனத்தையும் ஈர்த்தவர் அஜித். குழந்தைத்தனமான கொஞ்சலான முகமும், வசீகரக் குரலும் பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் திரும்பிப் பார்க்க வைத்தன.
ஆசை
முதல் படத்திற்குப் பிறகு நடித்த மூன்று படங்கள் பெரிதாக முத்திரை பதிக்கவில்லை. ஐந்தாவது படமாக வந்த ஆசை படம் பலரையும் ஆசை நாயகன் என அழைக்க வைத்தது. கொஞ்ச நாள் பொறு தலைவா என்று பாடி ஆடியவர், அடுத்த சில வருடங்களிலேயே தமிழ்நாட்டில் தலை என அழைக்கப்படுவார் என்பது ஆசை காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்காது. அசத்தலான வெற்றிக்கு முதல் பெரிய துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்தான் இந்த ஆசை.
காதல் கோட்டை
1996ல் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படம் தமிழ்த் திரையுலகில் வந்த காதல் திரைப்படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த ஒரு படம். இன்றைய தீவிர அஜித் ரசிகர்கள் அப்போது குழந்தைகளாகக் கூட இருந்திருக்கலாம். ஆட்டோ ஓட்டுனராக ஒரு அப்பாவித்தமான கதாபாத்திரத்தில் அனைவரது மனதிலும் ஒரு பெரிய கோட்டையை அஜித் கட்ட காரணமாக அமைந்த படம்தான் இந்த காதல் கோட்டை.
காதல் மன்னன்
தமிழ் சினிமாவில் 80களில் காதல் நடிப்பில் கோலோச்சி வந்த கார்த்திக்குக்குப் பிறகு 90களில் அப்படி ஒரு சொட்ட சொட்ட காதல் நடிப்பைக் கொடுத்தவர் அஜித் மட்டுமே. ஒரு அழகான பெண்ணுக்கும் ஒரு அழகான ஆணுக்கும் ஜோடிப் பொருத்தம் அழகாக அமைந்துள்ளது என்றால் அதற்கு அந்த ஆணும் தகுதியுடையவராக இருக்க வேண்டும். காதல் மன்னன் ஜெமினி கணேசன், நவரச நாயகன் கார்த்திக்குக்குப் பிறகு இந்த காதல் மன்னன் அஜித்துக்குத்தான் அப்படி ஒரு முழு தகுதியுள்ளது என பலரும் கொண்டாடிய படம் இது.
வாலி
ஒருவன் தீவிரக் காதலன், மற்றொருவன் வெறித்தனமானக் காதலன் என தன்னால் வேறு மாதிரியாகவும் நடிக்க முடியும் என பலருக்கும் அஜித் புரிய வைத்த படம். ஒரு அழகான நாயகனுக்குள் இப்படி ஒரு வெறித்தனம் இருக்க முடியுமா என அதிர வைத்த படம். அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் இது. ஒரு நாயகனுக்குள் இருக்கும் திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வரும் போதுதான் அவர் முழுமையடைகிறார். அந்த விதத்தில் இப்படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.
அமர்க்களம்
கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சென்டிமென்ட் என அஜித்தை ஆக்ஷன் ஏரியாவுக்குள் அதிரடியாக அமர்க்களமாக இறக்கிய படம். காதல் மன்னன், ஆக்ஷன் மன்னனாக அவதாரம் எடுத்த படம். அதோடு தன்னுடைய வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொண்ட முக்கியமான படம். அடுத்த கட்டத்திற்கு அஜித் பயணிக்க இந்தப் படம் சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஆக்ஷனிலும் அஜித் அசத்த முடியும் என்று நிரூபித்த படம்.
முகவரி
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு இந்தப் படம் ஒரு சரியான அடையாளமாக விளங்கியது. அஜித்துடைய திரைப்படப் பட்டியலில் இந்த முகவரியும் தனி முத்திரை பதித்தது. வெறும் பேச்சு மட்டும் எதையும் சாதித்துவிடாது முயற்சிதான் ஒரு மனிதனை முன்னேற்றும் என்று உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜித்தை சிறந்த நடிகராக மேலும் முன்னிலைப்படுத்திய படம்.
தீனா
தல என ரசிகர்கள் அன்பாக அைக்கக் காரணமாக அமைந்த படம் என்பது அனைவருக்குமே தெரியும். புது இயக்குனர்களை, பல கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்குச் சரியான வாய்ப்பைக் கொடுத்து அவர்களுக்கும் அஜித் ஒரு புது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த படம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் அது அஜித் அன்று விதைத்த ஒரு விதைதான் காரணம்.
வில்லன்
அழகான அஜித் அப்படியே மெருகு கலையாமல் வந்து படங்களில் நடித்துவிட்டுப் போவார். அவரால் வித்தியாசமான கதாபாத்திரங்களில், நடிப்புத் திறமையை வித்தியாசமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று எழுந்த சில விமர்சனங்களுக்கு அஜித் சரியான பதிலடி கொடுத்த படம். ஒரு மாஸ் ஆன மசாலா படம்.
வரலாறு
வில்லன் படம் மூலம் அஜித்தை வித்தியாசமான கதாபாத்திரங்களில் காட்டிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் ஒரு வித்தியாசமான மூன்று கதாபாத்திரங்கள் மூலம் அஜித்தை மட்டுமல்லாது மற்றவர்களையும் வியக்க வைத்த படம். பட வெளியீடு கொஞ்சம் தாமதமாகியது, இல்லையென்றால் இந்தப் படம் திரையுலக வசூல் வரலாற்றில் மிகப் பெரிய சாதனையைப் படைத்த படமாக அமைந்திருக்கும்.
பில்லா
ஸ்டைலிஷ் என்ற வார்த்தைக்கு இப்போது உள்ள நடிகர்களில் அஜித்தால் சரியான அர்த்தத்தைக் கொடுத்த படம். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அஜித் இங்கிருக்க வேண்டியவரை அல்ல ஹாலிவுட்டில் இருக்க வேண்டியவர் என மனதாரப் பாராட்டினார்கள். இப்படி ஒரு அசத்தலான ஆக்ஷன் படம் மீண்டும் அஜித் நடித்து வராதா என்று ரசிகர்களை அப்போது மிகப் பெரிய அளவில் ஏங்க வைத்த படம்.
மங்காத்தா
முன்னணியில் இருக்கும் போது ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்கவும் மிகப் பெரிய தைரியம் வேண்டும். தொடர்ச்சியாக வந்த சில தோல்விகளால் துவண்டு கிடந்த அஜித் ரசிகர்களை மங்காத்தாடா, அஜித்துடா, தலடா என உற்சாகத்தில் கரை புரள வைத்த படம். தமிழில் இப்படி ஒரு கதாபாத்திரத்தை வேறு எந்த ஒரு நடிகராவது செய்திருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுத்திய படம்.
வேதாளம்
படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டடு போது அது என்ன வேதாளம் என்று ஒரு பெயர் என பலரையும் யோசிக்க வைத்தார்கள். ஆனால், படம் வந்த பிறகுதான் அந்தத் தலைப்புக்கும் அஜித் ஒரு அடையாளத்தைக் கொடுத்தார் என்பது அனைவருக்கும் புரிந்தது. இதுவரையில் வந்த அஜித் படங்களை விட அதிகமான வசூலைக் குவித்த படமாகவும் வேறு ஒரு உயரத்தில் அஜித்தை உட்கார வைத்த படமாகவும் இந்தப் படம் அமைந்தது.
அஜித்தின் அசத்தல் படங்கள்...வரும் ஆண்டுகளிலும்..தொடர...வாழ்த்துகள்....