'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
சில தினங்களுக்கு முன் ஏதோவொரு வேலையாக பிரசாத் லேப் வளாகத்துக்கு வந்திருந்தார் கபாலி பட இயக்குநரான பா.ரஞ்சித். அதே நேரம் அங்குள்ள தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. படம் முடிந்து பத்திரிகையாளர்கள் வெளியே வர, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பி.ஆர்.ஓ. ஓடிப்போய் பா.ரஞ்சித்தின் காதில் என்னவோ சொன்னார்.
அவ்வளவுதான்... ஒரே ஓட்டமாக ஓடிய பா.ரஞ்சித், பத்திரிகையாளர்களின் பார்வையில் படாதவாறு ஒளிந்து கொண்டார். அவரிடம் அந்த பி.ஆர்.ஓ. என்ன சொல்லி இருப்பார்? பத்திரிகையாளர்கள் வருகிறார்கள். கபாலி பற்றி ஏதாவது வாயைக்கிளறுவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று நினைத்தாரோ என்னவோ ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்து கொண்டார் பா.ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் என பா.ரஞ்சித் இயக்கியது இரண்டே படங்கள்தான். அதற்குள் அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு அவரது திறமையைவிட மீடியாக்கள் அவருக்கு தந்த ஆதரவும் பாராட்டுக்களும்தான் முக்கிய காரணம். ரஜினி படம் கிடைத்ததும் பழசை மறந்துவிட்டார் பா.ரஞ்சித்.