ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேர்மையாக நடக்கும் அதிகாரிகளில் முக்கியமானவர், முதன்மையானவர் ஐஏஎஸ்., அதிகாரி சகாயம். இன்றைக்கு தமிழகத்தில் பல இளைஞர்களின் ரோல் மாடலாகவும் திகழ்கிறார். மேலும் இவர் அரசியலில் களம் இறங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியவர் ஈஸ்வர் இயக்கத்தில், அஸ்வின்குமார், மனீஷாஜித் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ''இணைய தலைமுறை'' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சகாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் அவருடன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், சமுத்திரகனி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டினர்.
நிகழ்ச்சியில் ஆர்கே செல்வமணி பேசியது ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேசியதாவது... இன்றைக்கு பல இளைஞர்களின் ரோல் மாடலாக சகாயம் திகழ்கிறார். தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்க்க துணிந்த ஒரே நபர் அவர் தான். யாருக்கும் விலை போகாதவர், நிச்சயம் அவர் அரசியலுக்கு வர வேண்டும். ஊழலற்ற சமுதயாத்தை அவர் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.