பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் முழுமையாக வெளியாகவில்லை. விஜய் நடித்த முந்தையப் படங்களின் வசூலைக் காட்டிலும் 'தெறி' படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமே விளம்பரப்படுத்தியது. படம் வெளியான முதல் சனி, ஞாயிறுக் கிழமைகள் தவிர இரண்டாவது வாரத்தின் சனி, ஞாயிறுக் கிழமைகளிலும் கூட படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியுள்ளது.
'தெறி' படத்திற்கு பெரிய அளவில் வேறு எந்தப் படத்தின் போட்டியும் இல்லாததாலும், அதற்கடுத்த வாரம் வெளிவந்த 'வெற்றி வேல்' படத்திற்கும் சரியான வரவேற்பு இல்லாததால் 'தெறி' படம் தொடர்ந்து ஓரளவிற்கு நல்ல வசூலைத் தொடர்ந்தது. படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் படம் ஓடினால் மேலும் பத்து கோடிகள் வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால் படம் எப்படியும் 140 கோடி வசூலைத் தாண்டிவிடும். வெளிநாடுகளில் இன்னும் சில நாடுகளில் முழுமையான வசூல் தொகை தெரியாமல் உள்ளது. அது முழுமையாக வந்த பின் இந்த வசூல் தொகையில் இன்னும் கூடுதல் தொகை கணக்கில் வரலாம். இப்போதைக்கு 'தெறி' படம் 150 கோடியைக் கடக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.