பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், ரஜினியின் எந்திரன்-2 தவிர, பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் அக்ஷ்ய் குமாருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போது அக்ஷ்ய்குமாரின் பாதுகாவலர், அந்த ரசிகரை தாக்கினார். இந்தசம்பவம் வைரலாக பரவ, அக்ஷ்ய் குமாருக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் அக்ஷ்ய் குமார்.
இதுகுறித்து அக்ஷ்ய் குமார் கூறியுள்ளதாவது... ''அன்றைக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் திரும்பி பார்த்தபோது தவறு ஏதுவும் நடைபெறவில்லை. பின்னர் மீடியாக்களில் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன், என்னுடைய பாதுகாவலர், ரசிகரை தாக்கியிருக்கிறார். இதையடுத்து எனது பாதுகாவலரை கூப்பிட்டு கண்டித்தேன், எச்சரிக்கையும் செய்துள்ளேன். இந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். சம்பந்தப்பட்ட ரசிகரிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்து கொள்வேன். ரசிகர்கள் தான் என்னுடைய பலமே என்று கூறியுள்ளார்.