டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கே.பாக்யராஜின் சித்து ப்ளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதையடுத்து வில் அம்பு, நையப்புடை படங்களுக்குப்பிறகு அவர் கைவசம் 11 படங்கள் இருப்பதாக சொல்கிறார். இதுபற்றி சாந்தினி கூறுகையில், சித்து ப்ளஸ்-2 படத்தில் நடித்து வந்தபோது நான் படித்துக்கொண்டிருந்தேன். பாக்யராஜ் சார் அழைத்ததினால்தான் அந்த படத்தில் நடித்தேன். பின்னர் படிப்பை தொடர்ந்ததால் அதன்பிறகு அதிகமான படங்களை ஏற்கவில்லை. நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் மட்டுமே நடித்தேன். ஆனால் இப்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். அதனால் முழுநேர நடிகையாகிவிட்டேன்.
அதன்காரணமாக, பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்கிற பாரபட்சம் பார்க்காமல் பிடித்தமான கதைகளாக ஏற்று நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது என் கைவசம் தமிழில் என்னோடு விளையாடு, தாமி, கண்ணுல காச காட்டப்பா உள்பட 8 படங்கள் உள்ளன. தெலுங்கில் 3 படங்களில் உள்ளன. இப்படி ஒரேநேரத்தில் 11 படங்களில் நடிப்பது பெரிய விசயம். இந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறும்போது நான் முன்னணி நடிகையாகி விடுவேன் என்று கூறும் சாந்தினி, இந்த படங்களில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நான் நடிப்பு, டப்பிங் என இரண்டு பக்கமும் பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.