அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
சினிமா பிரபலங்களில் சிலர் தங்களுக்குள் மனமொத்து வாழ முடியாமல் விவாகரத்து பெறுவது வாடிக்கையான நிகழ்வுதான். அதன்பின் அவர்களில் சிலர் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து இன்னொரு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் உண்டு. ஆனால் மலையாள நட்சத்திர தம்பதிகளாக இருந்து இப்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழும் நடிகர் திலீப்பும் மஞ்சு வாரியரும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசப்படவே செய்கின்றனர். இவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் மறு திருமணத்திற்கு முயற்சி செய்யவில்லை. அப்படி செய்வதிலும் அவர்களுக்கு விருப்பமில்லையாம்.
அதேபோல ஒருவர் மற்றவரை தாக்கி எங்கும் பேசுவதும் இல்லை.. பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதை கூட முன்கூட்டியே அறிந்து தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மறைந்த நடிகர் ரத்தீஷின் மகள் பத்மாவின் திருமணத்தில் இருவருமே கலந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.. காரணம் மணப்பெண் பத்மா இவர்கள் இருவரையும் தனது சகோதர, சகோதரி ஸ்தானத்தில் வைத்து அன்பு செலுத்துபவர். அதனால் திருமண நிகழ்வின்போது இருவரும் அருகருகே நெருங்கி வந்து மணமக்களை வாழ்த்திய தருணத்திலும் கூட ஒருவரை ஒருவர் பார்க்காததுபோல நாசூக்காக விலகிவிட்டார்கள்.. திருமணத்திற்கு வந்திருந்த பலரும் இவர்கள் இருவரும் ஏதாவது பேசுவார்கள் என எதிர்பார்த்து ஏமாற்றமே அடைந்தார்களாம்.