பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர் ராகிணி திவேதி. கன்னடத்தில் முன்னணி நடிகை. நிமிர்ந்து நில் தவிர அறியான் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ராகிணி, நிஜத்திலும் ஹீரோயினாக முயற்சி செய்கிறார். இதற்காக அவர் கடலுக்கு அடியில் நீந்தும் ஸ்கூபா பயிற்சி பெற்று வருகிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
தற்போது நிறைய ஆக்ஷன் படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ஆக்ஷன் ஹீரோயினாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இதன் முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவில் ஸ்கூபா பயிற்சி பெற்றேன். தற்போது மாலத்தீவில் அடுத்த கட்ட பயிற்சி பெற்று வருகிறேன். மனிதன் பார்வை படாத ஆழ்கடலுக்குள் தன்னந்தனியாக பயணிப்பது ஒரு தனி அனுபவம். மாலத் தீவை தொடர்ந்து இன்னும் சில நாடுகளிலும் இந்த பயிற்சியை தொடர்கிறேன். முழுமையான பயிற்சிக்கு பிறகு சான்றிதழ் தருவார்கள். அதன் பிறகு நான் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். அல்லது இது தொடர்பான போட்டிகளில் பங்கேற்கலாம். நான் இரண்டாவதை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ராகிணி.