இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
800 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ள ஸ்ரீதர், ‛போக்கிரி மன்னன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. தற்போது சாவடி என்ற படத்தின் மூலம் இயக்குனராகி அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். பிரவீன்சவி இசை அமைக்கிறார், சேவியலோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ஷில்பா ஹீரோயினாக நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ஜித்தேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
இது பைக் ரேசர்களின் கதை. இதுபற்றி ஸ்ரீதர் கூறியதாவது: இன்றைய காலத்தில் செல்போன் எப்படித விர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டதோ, அதேபோல் பைக்இளைஞர்கள் மத்தியில் நகமும் சதையுமாக ஒன்றிவிட்டது. குறிப்பாக ஸ்ட்ரீட் ரேஸ்பைக் என்றால் இளைஞர்களுக்கிடையே தனிஉற்சாகமே வந்துவிடும். இந்த படமும் இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. சாலைகளில் வேகமாக செல்லும் இளைஞர்கள் அதன்பின் விளைவுகளை பற்றி கவலைப்படுவதில்லை மேலும் இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய கதையே இந்தபடம். இப்படி ஒரு விழிப்புணர்வு சார்ந்த படத்தை இயக்க என்னை தூண்டியது என் கண்எதிரே நடந்த விபத்து ஒன்றுதான் காரணம்.
இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 7வருடம் ரேசில் ஈடுபடும் இளைஞர்களுடன் என்னுடைய நேரத்தை செலவழித்திருக்கிறேன். இந்தபடத்துக்காக மொத்தம் 50 இளைஞர்களை நான் தேர்வு செய்து வைத்திருந்தேன். அதில் டில்லி கணேஷ் என்ற இளைஞர் நிஜமாகவே ரேஸில் ஈடுபடும்போது இறந்துவிட்டார். மொத்தம் 45 முதல் 50 நாட்கள் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் ஸ்ரீதர்.