'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'சென்னை டூ சிங்கப்பூர்'. இது இந்தியா, சிங்கப்பூர் கூட்டுத் தயாரிப்பு. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞனை அந்த நாடு எப்படி பாதுகாத்து வேலை வாய்ப்பளித்து வாழ வைக்கிறது என்பது கதை. சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு உள்ளிட்ட பல அம்சங்கள் படத்தில் இடம் பெறுகிறது. கோகுல் ஆனந்த், அஜு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், சிவா, ஜாஸ் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அப்பாஸ் அக்பர் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார், கார்த்தி நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், சீனா, இங்கிலாந்து இந்தியா என 6 நாடுகளில் வெளியிடப்படுகிறது. இதற்கான பயணத்திட்டத்தை படக் குழுவினர் வகுத்துள்ளனர். இந்தியாவில் கமலஹாசன் வெளியிடுகிறார். இதற்காக படக்குழுவினர் அவரை சந்தித்து பேசினர்.
அப்போது “முந்தைய காலத்தில் தமிழ் மன்னர்கள் படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் என்ற நகரத்தை நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். ஜிப்பரானின் முயற்சி இத்துடன் முடிந்து விடாமல் கின்னஸ் சாதனை நோக்கி பயணிக்க வேண்டும்'' என்று கமல் வாழ்த்தினார்.