டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'தெறி' படத்தை எம்ஜி அடிப்படையில் வாங்க முடியாது, விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே வெளியிட முடியும் என செங்கல்பட்டு ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் வெளியான 'தெறி' படம் செங்கல்பட்டு ஏரியாவில் சுமார் 60 திரையரங்குகளில் வெளியாகாமல் போனது. இதனால் சுமார் 10 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்கு உரிமையாளர் சங்கமும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்கள். இனி, 'தெறி' படத்தைத் திரையிடாத திரையரங்குகளுக்கு ஒத்துழைப்பு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளவேயில்லை.
'தெறி' படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாதது இனி வரும் படங்களுக்கும் நல்லதல்ல, திரையுலகத்திற்கும் நல்லதல்ல என்று நினைத்த சிலர் இரு தரப்பிற்கும் இடையே சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் இதை முன்னெடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே நடந்த சமாதானப் பேச்சு வார்த்தை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. அதன்படி இனி செங்கல்பட்டு ஏரியாவில் விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே படங்களைத் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர்களும் சம்மதித்துவிட்டதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சென்னை மாநகர ஏரியாவைப் போலவே இனி செங்கல்பட்டு ஏரியாவிலும் விகிதாச்சார அடிப்படையில்தான் படங்கள் திரையிடப்படும்.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்த பிறகு திரைப்பட வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது செங்கல்பட்டு ஏரியாவில் நடைபெற்ற மோதலால் எதிர்வரும் காலங்களில் திரைப்பட வியாபாரத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.
இதனிடையே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு ஏரியாவில் சில தியேட்டர்களில் மட்டும் தெறி படம் ரிலீஸாகியுள்ளது. படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் பலர் படத்தை வாங்கவில்லை, சிலர் மட்டும் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.