'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் முதன் முறையாக ஒரே படத்தில் நடிக்கும் புதிய படத்திற்க சபாஷ் நாயுடு என்று பெயர் வைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று காலை நடைபெற்றது. இந்தத் தமிழ்த் தலைப்பை இளையராஜாதான் சொன்னார் என சில தினங்களுக்கு முன்பே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
தசாவதாரம் படத்தில் 9 கதாபாத்திரங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரமாக விளங்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தைத்தான் ஒரு முழுநீள படத்திற்குரிய கதாபாத்திரமாக இந்தப் படத்தில் கமல்ஹாசன் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர் சங்க நிர்வாகக் குழுவினர், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் பிரபு உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.