தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்து விட்டு வாகா படம் மூலம் தமிழுக்கு என்ட்ரியாகியிருப்பவர் ரன்யா. ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ள ரன்யா, கதைப்படி காஷ்மீரில் வாழும் தமிழ்ப்பெண்ணாக வாகாவில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் நடித்த அனுபவம் இருந்ததால் தமிழ் வசனங்களை கன்னடத்தில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பிக்கப் பண்ணி விட்டாராம் ரன்யா. அதனால் ரன்யாவின் நடிப்பு குறித்து அப்படக்குழுவினர் நல்லவிதமாக சொல்லி வருவதால், வாகாவைத் தொடர்ந்து அவரை படங்களுக்கு புக் பண்ண சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தையில் இறங்கி விட்டனர்.
அந்த வகையில், இரண்டு தமிழ்ப்படங்களில் நடிக்க கதை கேட்டுள்ள ரன்யா, அந்த படங்களில் நடிப்பது முன்னணி நடிகர்கள் இல்லை என்பதால், இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாராம். காரணம், வாகா ஹிட்டாகி விட்டால் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், ஒருவேளை படம் எதிர்பார்த்தபடி ஓடாதபட்சத்தில் கதை கேட்டுள்ள படங்களை விட வேண்டாம். கிடைக்கிற படங்களில் நடித்து மார்க்கெட்டை பிடிப்போம் என்கிற யோசனையில் இருக்கிறாராம்.