ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நடிகர் கமல்ஹாசன் ஒரேநாளில் மூன்று படங்களை துவக்குகிறார், இதற்காக நடிகர் சங்க வளாகம் தயாராகியுள்ளது. தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதோடு மேலும் இரண்டு படங்களையும் ஆக மொத்தம் மூன்று படங்களை ஒரேநாளில் ஆரம்பிக்கிறார் கமல். இதுகுறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா.? என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு புரெடாக்ஷன் நம்பர் 41, 42, 43 என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன். இப்படங்களின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் ஏப்.,29ம் தேதி(நாளை) நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஏற்கனவே தன் படத்தை நடிகர் சங்க வளாகத்தில் துவக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி நடிகர் சங்க வளாகம் பிரத்யேகமாக தயாராகியுள்ளது. சங்க வளாகத்தில் சாமியானா பந்தல் எல்லாம் போடப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராகியுள்ளது.
பாபநாசம் படத்திற்கு பிறகு கமலின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறுகியகாலத்தில் படங்களை தயாரித்து வெளியிட உள்ளார். அதன்படி தற்போது மூன்று படங்களுக்கான பூஜையை நாளை போட இருக்கிறார்.