ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கி வரும் 'எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தின் வேலைகள் பரபப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் '2.0' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் 45 நாட்கள் படமாக்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட படத்தின் மற்ற வில்லன் நடிகர்களும் கலந்து கொண்டனர். ரோபாவாக அக்ஷய்குமார் வித்தியாசமான தோற்றத்திலிருந்த புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.
இந்நிலையில் 2.0 படத்துக்கான 3-வது ஷெட்யூல் மே மாதம் முதல் வாரம் தொடங்குகிறது. சென்னை பூந்தமல்லியிலுள்ள மூடப்பட்டு கிடக்கும் தீம் பார்க் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு புலி படத்துக்காக செட் போடப்பட்ட ஈசிஆரில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து, படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.
'கபாலி' வேலைகள் முழுவதையும் ரஜினி முடிந்துக் கொடுத்துவிட்டார். எனவே, இனி முழுமூச்சாக '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் ரஜினி.