தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருவது தெரிந்த தகவல். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள் 'தெறி' படம் பார்க்க ஆசைப்பட்டனராம். இதை நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் தெரிவித்த நடிகர் லாரன்ஸ் அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
சென்னையின் ஏதாவது ஒரு தியைரங்கில் 60 டிக்கெட்டுகள் ஒதுக்கிக் கொடுப்பார் என லாரன்ஸ் எதிர்பார்த்தாராம். விஜய்யோ லாரன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, லாரன்ஸ் இல்லத்தில் உள்ள 60 குழந்தைகளும் தனியாக அமர்ந்து 'தெறி' படத்தை பார்க்கும் வகையில் சென்னை ஏவிஎம் பிரிவியூ தியேட்டரில் பிரத்யேகமாக ஷோ ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் விஜய். அத்தனை குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தியதற்காக விஜய்க்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.