ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு, மதுரை டூ தேனி, வேங்கை என சில படங்களில் நடித்து விட்டு நாதஸ்வரம் தொடரில் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரிதிகா. அதையடுத்து மாமியார் தேவை, உணர்வுகள் சங்கமம், வைதேகி என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது குலதெய்வம், என் இனிய தோழியே போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
தனது நடிப்பு குறித்து நேயர்கள் சொல்லும் கருத்து பற்றி ஸ்ரிதிகா கூறுகையில், சின்னத்திரையைப் பொறுத்தவரை பெரும்பாலும் நான் செண்டிமென்ட் வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதை நேயர்கள் பெரிய அளவில் ரசித்துள்ளனர். அதோடு, மனதை தொடும் வேடங்களில் நடிக்கவே கேட்டுக்கொள்கிறார்கள். முக்கியமாக, பேஸ்புக்கில் என்னை தொடர்பு கொள்ளும் பெண்கள், குடும்பப் பெண்களுக்கு அறிவுறுத்தக்கூடிய நல்ல கருத்து சொல்லும் கேரக்டர்களிலும் நடிக்க சொல்கிறார்கள்.
சீரியல்களைப் பொறுத்தவரை நேயர்களின் வரவேற்பு தான் முக்கியம் என்பதால், என்னிடமிருந்து எந்த மாதிரியான நடிப்பை நேயர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொண்டுதான் நான் கதாபாத்திரங்களை செலக்ட் செய்கிறேன் என்று கூறும் ஸ்ரிதிகா, நாதஸ்வரம் தொடரில் நான் நடித்த மலர் கேரக்டர் பெரிய அளவில் நேயர்கள் கவர்ந்த வேடம். அந்த வகையில் எனது பெயர் யாருக்குமே தெரியாது. இப்போதுவரை என்னை மலர் என்றுதான் சொல்கிறார்கள்.அந்த வகையில், பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி எப்படி மலர் டீச்சராக பேசப்பட்டு வருகிறாரோ, அதற்கு முன்பே நாதஸ்வரம் தொடரில் நான் மலர் கேரக்டர் மூலம் பேசப்பட்டேன். ஆக, நான்தான் சின்னத்திரையின் மலர் டீச்சர் என்கிறார் ஸ்ரிதிகா.