தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த, 2012ல் வெளிவந்த தட்டத்தின் மறையத்து என்ற மலையாளப் படத்திற்காக, இவருக்கு எட்டுக்கும் அதிகமான விருதுகள் கிடைத்தன. தில்லுமுல்லு தமிழ் படத்திற்கு பின், மீண்டும் ஒரு காதல் கதை படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடித்து வரும் இஷாவுடன் ஒரு சந்திப்பு.
தமிழில் உங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லையே?
உண்மை தான்; எனக்கு வந்த சில கதைகள் சரியாக அமையவில்லை. ரொம்ப நாளாக நானும் வெயிட் பண்றேன். தட்டத்தின் மறையத்து படத்தை தமிழில் எடுப்பதாக இயக்குனர் ஜவஹர் கூறியதும், சந்தோஷமா ஒத்துக் கொண்டேன்.
தில்லுமுல்லு படத்துக்கு பின், கோலிவுட் உங்களை ரொம்பவே எதிர்பார்த்ததே?
ஹீரோயினாக இருந்தாலும், கேரக்டர் நன்றாக அமைந்தால் தான், தொழிலில் நிலைக்க முடியும். அப்படி ஒரு வாய்ப்புக்காக தமிழில் காத்திருந்தேன். ஆனால், மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தன. இப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறேன். எனக்கு எந்த மொழி படங்களாக இருந்தாலும் கதை தான் முக்கியம்.
உங்களுக்கு நன்றாக நடனமாடத் தெரியும்; இப்போதும் அதற்காக பயிற்சி பெறுகிறீர்களா?
ஜாஸ், பாலே, ஹிப்ஹாப் என்று பல வகை நடனங்களும் எனக்குத் தெரியும். கடந்த, மூன்று ஆண்டுகளாக, கதக் டான்ஸ் கற்று வருகிறேன். டான்ஸ் என்றாலே, ஒரு ஜாலி மூடு வந்துடும். டான்ஸ் கூடவே, யோகாவும் கற்று வருகிறேன்.
மாடலிங்கை இன்னும் விடவில்லை போலிருக்கிறதே?
மக்கள், என்னை மறக்காமல் இருக்க வேண்டும்; அதற்காக விளம்பர படங்களிலும் நடிக்கிறேன். இந்த விளம்பர படங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவர் வீட்டுக்கும், டிவி வாயிலாக போய் வருவதாக உணருகிறேன். மக்கள், என்னை மறக்காமல் இருக்கின்றனரே; அது போதும்.
எந்த இயக்குனர், ஹீரோ படங்களில் நடிக்க ஆசை?
மணிரத்னம், கவுதம் மேனன் போன்றவர்கள் படங்களில் நடிக்க வேண்டும். சூர்யா, மாதவன், சித்தார்த் போன்றவர்களுடன் ஜோடி சேர வேண்டும்; இப்படி, ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு.
இப்போதெல்லாம் நடிகையருக்குள் வாய்ப்புகளை பெறுவதில் கடுமையான போட்டி நிலவுகிறதே?
எல்லா மொழிகளிலும் நடிகையருக்குள் போட்டி இருக்கத் தான் செய்கிறது. நான் இப்போது தான், சினிமாவுக்குள் வந்திருக்கிறேன். அதனால் நான் யாருக்கும் போட்டியாக இருக்க வாய்ப்பில்லை. அதுபோல் மற்றவர்கள் பற்றியும் கவலை இல்லை. நான் என் வேலையை செய்கிறேன். அவ்ளோ தான்.
கங்கனா மாதிரி, ஹீரோயினை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவீர்களா?
எனக்கு ஆசை இருக்கு. ரசிகர்களும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளுக்கு ஆர்வம் காட்டுகின்றனர். நாங்களும் நடிப்பில் பேசப்படுவோம். ஆனால், இப்போது நான் அந்த கட்டத்திற்கு போக வில்லை. ஹீரோக்களுடன் பீச், பூங்காவில் ஆடிப் பாடிக் கொண்டிருக்கேன்.
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்வது அதிகமாகி விட்டதே?