தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கும் உலக அழகி ஐஸ்வர்யாராய், மீண்டும் படங்களில் பிஸியாக தொடங்கியிருக்கிறார். அவர் தற்போது சரப்ஜித் சிங் வாழ்க்கை வரலாற்று படத்தில் சரப்ஜித் சிங்கின் தங்கையாக நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா, அஜய் தேவ்கனின் பாத்ஷாகோ படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் ரோல் எந்தமாதிரியானது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவியின் வாழ்க்கை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். யார் இந்த காயத்ரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணியான இவர், காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து 3 முறை வெற்றி பெற்றார். அதோடு அவரின் அரண்மனையில் ஐடி., அதிகாரிகள் வருமான வரி சோதனை நடத்தியது, அதனால் அவர் சிறை சென்றது என அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். பாத்ஷாகோ படமும் இதன் அடிப்படையில் தான் உருவாக இருக்கிறது. மிலன் லுதிரா இப்படத்தை இயக்க உள்ளார். விரைவில் இப்படம் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஜன., 26ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.